தாண்டிக்குடி முருகன்
தாண்டிக்குடி மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு மலை கிராமம் .போகர் நவபாஷானத்தில் முருகர் விக்ரகங்கள் 7 க்கு குறையாமல் செய்ததாகவும் அவைகள் கொடைக்காணல் மலையில் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது . அவைகளில் தாண்டிக்குடியில் இருக்கும் பாலசுப்ரமணியம் விக்ரகமும் ஒன்று என்றும் இங்கிருந்து தான் பழனிக்கு தாண்டிக் குதித்ததால் இவ்வூருக்கு தாண்டிக் குடி என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள் , மேலும் இங்கு விபூதி பிரசாதம் கிடையாது மலை மண்ணையே பிரசாதமாக தருகிறார்கள் .
இங்கு தரிசித்தால் அனைத்து தடைகளும் தாண்டிக் குதித்து ஓடி விடும் என்றும் பிள்ளைப் பேறும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை . மலை கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து செல்லும் பழனி பாதயாத்திரை செல்லுபவர்கள் பழனியை தரிசித்து விட்டு இங்கும் தரிசித்தால் தான் விரதம் நிறைவும் பெறும் என்பதையும் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள் .
மேலும் பில்லி சூனியத்தை தீர்க்கும் முருகன் கோவில் இது ஒன்றே என்றும் சொல்லப் படுகிறது . இங்கு மட்டுமே இரவில் தங்காமல் பில்லி சூனியம் வைக்கப் பட்டவர்கள் வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்து கந்தர் சஷ்டி கவசம் படித்தால் நீங்குவதாகவும் சொல்லப்படுகிறது .
இது வத்தலகுண்டு வில் இருந்து மலை சாலையில் 45 கி மீ தூரத்திலும் , கொடைக்காணல் பெருமாள் மலையில் இருந்து பண்ணைக் காடு வழியாக 67 வது கி மீ தூரத்திலும் உள்ளது . பழனி ,கொடைக்காணல், வத்தலகுண்டு வில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
மேலும் ஊர் முழுதும் மிளகு , ஏலக்காய் , காப்பிக் கோட்டைகள் ,கிச்சலி பழம் சாகுபடிகள் .
இவ்வளவும் தரையில் உள்ள ஊர்களான வத்தலகுண்டு மதுரைக்கரர்களால் செய்யப் படுகிறது . இவ்வூர்காரர்கள் பொருளாதார முன்னேற்றம் அடையவில்லை . மேலும் போக்குவரத்திற்கு குதிரைகளையும் , டாட்டா எஸ்டேட் ஜீப்புகளையும் பயன்படுத்துகின்றனர் .
மத்திய அரசின் காப்பி வாரியத்தின் இணை மண்டல அலுவலகமும் அவர்களது குவார்ட்டர்ஸ் ம் உள்ளது . ஆனால் இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு 2 கி மீ தூரம் சாலை வசதிகள் கிடையாது . எவ்வித சுகாதரமான உணவகங்களும் இல்லை . தங்கும் வசதிகள் இல்லை .
இதனை அரசு செவி சாய்த்து பக்தர்களுக்கு வசதிகளை செய்தால் இன்னும் முருகனை பெருமைகளை முழுமையாக நாம் உணரலாம் .
இங்கும் ரியல் எஸ்டேட் பீவரும் உள்ளது . வெளியூர்காரர்கள் யார் அங்கு சென்றாலும் இடம் வேண்டுமா என்று கேட்டு நச்சரிக்கவும் செய்கிறார்கள் .
முடிவாக கொடைக்கானலுக்கு மேல் குளிரையும் அழகையும் மலை மேடுகளையும் கொண்ட தாண்டிக்குடி யில் மகிழ்வை அனுபவிப்பதற்கு பதில் முன்னேறாத , கல்லாமையின் , வறுமையின் தாக்கத்தை சோகத்தை உணர முடிந்தது .
தாண்டிக்குடி மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு மலை கிராமம் .போகர் நவபாஷானத்தில் முருகர் விக்ரகங்கள் 7 க்கு குறையாமல் செய்ததாகவும் அவைகள் கொடைக்காணல் மலையில் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது . அவைகளில் தாண்டிக்குடியில் இருக்கும் பாலசுப்ரமணியம் விக்ரகமும் ஒன்று என்றும் இங்கிருந்து தான் பழனிக்கு தாண்டிக் குதித்ததால் இவ்வூருக்கு தாண்டிக் குடி என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள் , மேலும் இங்கு விபூதி பிரசாதம் கிடையாது மலை மண்ணையே பிரசாதமாக தருகிறார்கள் .
இங்கு தரிசித்தால் அனைத்து தடைகளும் தாண்டிக் குதித்து ஓடி விடும் என்றும் பிள்ளைப் பேறும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை . மலை கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து செல்லும் பழனி பாதயாத்திரை செல்லுபவர்கள் பழனியை தரிசித்து விட்டு இங்கும் தரிசித்தால் தான் விரதம் நிறைவும் பெறும் என்பதையும் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள் .
மேலும் பில்லி சூனியத்தை தீர்க்கும் முருகன் கோவில் இது ஒன்றே என்றும் சொல்லப் படுகிறது . இங்கு மட்டுமே இரவில் தங்காமல் பில்லி சூனியம் வைக்கப் பட்டவர்கள் வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்து கந்தர் சஷ்டி கவசம் படித்தால் நீங்குவதாகவும் சொல்லப்படுகிறது .
இது வத்தலகுண்டு வில் இருந்து மலை சாலையில் 45 கி மீ தூரத்திலும் , கொடைக்காணல் பெருமாள் மலையில் இருந்து பண்ணைக் காடு வழியாக 67 வது கி மீ தூரத்திலும் உள்ளது . பழனி ,கொடைக்காணல், வத்தலகுண்டு வில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
மேலும் ஊர் முழுதும் மிளகு , ஏலக்காய் , காப்பிக் கோட்டைகள் ,கிச்சலி பழம் சாகுபடிகள் .
இவ்வளவும் தரையில் உள்ள ஊர்களான வத்தலகுண்டு மதுரைக்கரர்களால் செய்யப் படுகிறது . இவ்வூர்காரர்கள் பொருளாதார முன்னேற்றம் அடையவில்லை . மேலும் போக்குவரத்திற்கு குதிரைகளையும் , டாட்டா எஸ்டேட் ஜீப்புகளையும் பயன்படுத்துகின்றனர் .
மத்திய அரசின் காப்பி வாரியத்தின் இணை மண்டல அலுவலகமும் அவர்களது குவார்ட்டர்ஸ் ம் உள்ளது . ஆனால் இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு 2 கி மீ தூரம் சாலை வசதிகள் கிடையாது . எவ்வித சுகாதரமான உணவகங்களும் இல்லை . தங்கும் வசதிகள் இல்லை .
இதனை அரசு செவி சாய்த்து பக்தர்களுக்கு வசதிகளை செய்தால் இன்னும் முருகனை பெருமைகளை முழுமையாக நாம் உணரலாம் .
இங்கும் ரியல் எஸ்டேட் பீவரும் உள்ளது . வெளியூர்காரர்கள் யார் அங்கு சென்றாலும் இடம் வேண்டுமா என்று கேட்டு நச்சரிக்கவும் செய்கிறார்கள் .
முடிவாக கொடைக்கானலுக்கு மேல் குளிரையும் அழகையும் மலை மேடுகளையும் கொண்ட தாண்டிக்குடி யில் மகிழ்வை அனுபவிப்பதற்கு பதில் முன்னேறாத , கல்லாமையின் , வறுமையின் தாக்கத்தை சோகத்தை உணர முடிந்தது .